×

அமைச்சர் தங்கமணி பேட்டி மதுபானங்கள் விலை உயர்வால் 2,500 கோடி கூடுதல் வருவாய்

நாமக்கல்:  தமிழக மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி, நாமக்கல்லில் நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதே அதிமுக அரசின் கொள்கையாகும். அதற்கான தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. படிப்படியாக மதுக்கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும். கடந்த ஆண்டுகளில் 1000 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது. அரசின் வருவாயை பெருக்கும் வகையில், தற்போது மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 2,500 கோடி  கூடுதலாக வருவாய் கிடைக்கும் என்றார்.

Tags : Minister Thangamani Breweries ,Minister , Minister Thangamani, price rise, Extra revenue
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...