×

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளனின் கருணை மனு மீது ஆளுநர் முடிவெடுக்க உரிமை உள்ளது: உயர் நீதிமன்றத்தில் மத்தியஅரசு பதில்

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ்  கொலை வழக்கில் ஆயுள் தண்டனை  அனுபவித்து வரும் நளினி, முருகன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்கும்படி, தமிழக அமைச்சரவை, 2018 செப்டம்பர் 9ம் தேதி தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு பரிந்துரைத்தது.
 அந்த  பரிந்துரை மீது ஆளுநர் இதுவரை எந்த முடிவும் எடுக்காததால், இதுவரை தன்னை விடுதலை செய்யாமல் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதால், தன்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் எனக்கோரி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது,  மத்திய உள்துறை அமைச்சகத்தின் துணை செயலாளர் முகமது நஸிம் கான் சார்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது.  அதில், 7 பேர் விடுதலை குறித்த தமிழக அரசின் கடிதத்தை நிராகரித்து 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதமே மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நளினியின் மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது.

அதே நேரத்தில் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள  பேரறிவாளன்  ஆளுநரிடம் கொடுத்த கருணை மனு நிலுவையில் உள்ளது.அதன் மீது சட்டப்படி முடுவெடுக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. ஏழு பேர் விடுதலை முடிவை மத்திய அரசு ஏற்கனவே நிராகரித்ததால், பேரறிவாளன் கருணை மனு மீது சுதந்திரமாகவும், சட்டப்படியும் ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.  வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை பிப்ரவரி 12ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags : governor ,Rajiv ,government , Rajiv,Governor ,terrorist,Central government
× RELATED சென்னை ராஜிவ் காந்தி அரசு...