×

கல்லூரி டி20 கிரிக்கெட் எஸ்டிஎன்பி வெற்றி

சென்னை: வேளச்சேரி குருநானக்  கல்லூரி  சார்பில்  கல்லூரிகளுக்கு இடையிலான 6வது  பவித்சிங் நய்யார் நினைவுக் கோப்பைக்கான அகில இந்திய டி20 கிரிக்கெட் போட்டி நடக்கிறது.  மாணவிகள் பிரிவில் நேற்று குரோம்பேட்டை எஸ்டிஎன்பி வைஷ்ணவா கல்லூரியும்,  அண்ணாசாலை காயிதே மில்லத் பெண்கள் கல்லூரியும் மோதின. சென்னை மாநிலக்கல்லூரி  மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற காயிதே மில்லத் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் விளையாடிய  எஸ்டிஎன்பி வைஷ்ணவா கல்லூரி அணி 2 விக்கெட் இழப்புக்கு 129 ரன் எடுத்தது. அந்த அணியின் இந்தியா 31, ஹேமமாலினி 27ரன் எடுத்தனர். காயிதே மில்லத் சார்பில் நர்மதா, சரண்யா தலா ஒரு விக்கெட் எடுத்தனர். அடுத்து விளையாடிய   காயிதே மில்லத்  20 ஓவரில்  3 விக்கெட் இழப்புக்கு 122 ரன் எடுத்து 4 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அந்த அணியின் சங்கவி 40 ரன் எடுத்தார். எஸ்டிஎன்பி கல்லூரியின்  கவி பாரதி 2, அனீஷா ஒரு விக்கெட் எடுத்தனர்.

Tags : College T20 Cricket ,SDNP
× RELATED சில்லிபாயின்ட்..