திருப்பத்தூர்: ஆம்பூர் சார்பதிவு அலுவலக உதவியாளர் பிரகலாதன் சில நாட்களாக பணிக்கு வரவில்லை என புகார் எழுந்துள்ளது. ஜனவரி 31 தேதி முதல் பிரகலாதன் பணிக்கு வராதது குறித்து கடிதம் அனுப்பியும் இதுவரை பதில் இல்லாததால் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 4, குரூப் 2ஏ தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ள நிலையில் பணிக்கு வராததால் சந்தேகம் எழுந்துள்ளது. பிரகலாதன் குறித்து ஆம்பூர் சார்பதிவாளர் ஜெய்குமார் மாவட்ட முதன்மை பதிவாளரிடம் புகார் மனு அளித்துள்ளார். 2018ம் ஆண்டு நவம்பரில் நடந்த குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்தவர் பிரகலாதன் என தகவல் வெளியாகியுள்ளது.