டெல்லி : மக்களவையில் டியூப் லைட் என விமர்சித்து பேசுவது பிரதமருக்கு அழகல்ல என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.பிரதமராக இருப்பவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற வரைமுறைகள் உள்ளன என்று கூறிய ராகுல் காந்தி, வயநாட்டில் மருத்துவக் கல்லூரி இல்லாதது தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்ப தாம் விரும்பியதாகவும் தான் பேசினால் பாஜகவுக்கு பிடிக்காது என்பதால் தன்னையும் , கட்சியினரையும் பேச அனுமதிக்கவில்லை என்றும் ராகுல் எடுத்துரைத்தார்.