டெல்லி : சபரிமலை கோயிலுக்கு சொந்தமான ஆபரணங்களை ஆய்வு செய்து அறிக்கை தர உச்சநீதிமன்றம் குழு அமைத்தது. ஓய்வு பெற்ற நீதிபதி சி.என். ராமச்சந்திரன் நாயர் தலைமையில் உச்சநீதிமன்றம் குழு அமைத்தது. பந்தள அரச குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு எத்தனை ஆபரணங்கள் உள்ளன என்றும் ஆபரணங்களின் தரம், மதிப்பு, வகைகள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து அறிக்கை தரவும் குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சீலிட்ட கவரில் குழு அறிக்கை தர உத்தரவிட்டு வழக்கை 4 வாரத்திற்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.