நீலகிரி : நீலகிரி மாவட்டம் முதுமலையில் அமைச்சர் காலணியை அகற்ற சிறுவனை பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்த சிறுவனுடன் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சமரச முயற்சி மேற்கொண்டுள்ளார். ஊட்டியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு அழைத்து சிறுவனிடம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.