சென்னை : 2016ல் நடந்த விஏஓ தேர்வு ஆவணங்களை டிஎன்பிஎஸ்சியிடம் சிபிசிஐடி கேட்கிறது. 2016ல் டிஎன்பிஎஸ்சி நடத்திய விஏஓ தேர்விலும் முறைகேடு நடைபெற்றதாக சிபிசிஐடி சந்தேகிக்கிறது. டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் இன்று அல்லது நாளை ஆவணங்களை சமர்ப்பிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 2016 ம் ஆண்டு முதல் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முதல் 100 இடங்களைப் பிடித்தவர்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது.