×

தொழிலதிபர் வீட்டில் 2 லட்சம், 8 சவரன் திருடிய வேலைக்கார பெண் சிக்கினார்

சென்னை: தொழிலதிபர் வீட்டில் 2 லட்சம் மற்றும் 8 சவரன் நகைகளை திருடிய வேலைக்கார பெண்ணை போலீசார் கைது செய்தனர்.எழும்பூர்  காசா மேஜர் சாலை சுலைமான் சக்ரியா அவென்யூவை சேர்ந்தவர் கல்யாணகுமார்  (40). தொழிலதிபரான இவர், தற்போது வெளிநாட்டில் உள்ளார். வீட்டில் இவரது  வயதான பெற்றோர் மட்டும் தங்கி உள்ளனர். சேத்துப்பட்டு எம்.எஸ். நகர் முதல் தெருவை சேர்ந்த லோகநாயகி (48) என்பவர், கடந்த 5 ஆண்டுகளாக கல்யாணகுமாரின்  ெபற்றோருக்கு உதவியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 24ம்  ேததி லோகநாயகி திடீரென வீட்டு வேலைக்கு வரவில்லை. அவரை தொடர்பு கொள்ளவும்  முடியவில்லை. இதனால் சந்தேகமடைந்த கல்யாணகுமாரின் பெற்றோர் வீட்டில் உள்ள  நகை மற்றும் பணத்தை சரிபார்த்துள்ளனர். அப்போது, பீரோவில் வைத்திருந்த 8  சவரன் நகை மற்றும் ₹2 லட்சம் மாயமாகி இருந்தது.

இதுகுறித்து  கல்யாணகுமாரிடம் அவரது பெற்றோர் தெரிவித்தனர். உடனடியாக, வெளிநாட்டில்  இருந்து சென்னை வந்த அவர், எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சந்தேகத்தின் பேரில் லோகநாயகியை பிடித்து விசாரித்தபோது,  பண கஷ்டம் காரணமாக கல்யாணகுமார் வீட்டில் இருந்து 8 சவரன் நகை மற்றும்  ₹2 லட்சம் திருடியதை ஒப்புக்கொண்டார். அதைதொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





Tags : house ,shaving maid steals businessman , 2 lakh, 8 shaving ,maid ,businessman, house
× RELATED சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர்...