சென்னை: சென்னை அருகே பனையூரில் நடிகர் விஜய் வீட்டில் நடைபெற்று வந்த வருமானவரித்துறை சோதனை நிறைவடைந்துள்ளது. பிகில் படத்திற்காக பெற்ற சம்பளம் தொடர்பாக நடிகர் விஜயிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த விஜயை வருமானவரித்துறை நேற்று சென்னை அழைத்து வந்தது. விஜய் வீட்டில் நேற்று இரவு முதல் தொடங்கிய வருமானவரித்துறையின் சோதனை தற்போது நிறைவு பெற்றுள்ளது.