மதுரை: பள்ளி மாணவனை தமது செருப்பை கழட்டுமாறு கூறிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுரை மேலூர் காவல் நிலையத்தில் திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்தவர்கள் புகார் அளித்தனர். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டுள்ளது.