×

சிவகாசி அருகே புதர்மண்டிக் கிடக்கும் நீர்வரத்து ஓடை

சிவகாசி: சிவகாசி அருகே புதர்மண்டிக் கிடக்கும் நீர்வரத்தை ஓடையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் சாலைகள், நீர்வழிப்பாதைகள், ஓடைகளில் ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக பெயரளவில் ஆக்கிரமி–்ப்பு எடுக்கப்பட்ட போதிலும் தற்போது அந்த நடவடிக்கையும் இல்லை. சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேவர்குளம் ஊராட்சியில் பல்வேறு நீர்வரத்து பாதைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக வெள்ளமாலை நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பிக்கப்பட்டு, புதர்மண்டிக் கிடக்கிறது. இதனால், இந்த நீர்வரத்து பாதையில் கழிவுநீர் தேங்கியுள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். நீர்வரத்து ஓடை புதர்மண்டி, புல் பூண்டுகள் நிறைந்து காணப்படுகின்றது. இந்த நீர்வரத்து பாதையில் சிறிய அளவிலான தடுப்பணையும் அமைக்கப்பட்டுள்ளது. மழை காலங்களில் தண்ணீர் நிறைந்து நிற்கும் பட்சத்தில் தேவர்குளம், இபி காலனி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும். தண்ணீர் தட்டுப்பாடு நீங்கும். எனவே, தேவர்குளம் ஊராட்சியி–்ல் உள்ள வெள்ளமாலை நீர்வரத்து ஓடை உட்பட அனைத்து நீர்வரத்து பாதைகளயும் சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags : Pudurmantikkadu Stream ,Sivakasi , Sivakasi, Pudurmantikkal, water stream
× RELATED சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் உற்பத்தி குடோனில் பயங்கர வெடி விபத்து