சென்னை: சென்னை மற்றும் மதுரையில் கடந்த 2 நாளாக நடந்த சோதனை பற்றி வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் 38 இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வருமான வரி சோதனையில் ரூ.300 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாகவும் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பைனான்சியர் அன்புசெழியன், நடிகர் விஜய் ஆகியோர் வீட்டில் சோதனை நடந்ததை வருமான வரித்துறை உறுதி செய்தது.