×

தென்னையில் வெள்ளை ஈயின் பாதிப்பை கட்டுப்படுத்தும் முறைகள்: விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி ஆலோசனை

அரியலூர்: தென்னையைத் தாக்கும் ரூகோஸ் சுருள் ஈ தாக்குதலுக்கு மேலாண்மை நடவடிக்கைகள் குறித்து வேளாண் அதிகாரி விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கற்பக விருட்சம் என்று அழைக்கப்படும் தென்னை மரத்தைப் பல்வேறு பூச்சிகள் தாக்கி மகசூல் பாதிப்புக்கு காரணமாக அமைகின்றன. தற்போது புது வகையான ரூகோஸ் சுருள் வௌ்ளை ஈ என்ற பூச்சியின் தாக்குதல் தென்னை சாகுபடி செய்யப்படும் ஒரு சில பகுதிகளில் தென்படுகிறது. ரூகோஸ் சுருள் வௌ்ளை ஈ முதல் முதலில் கடந்த 2004 ம் ஆண்டு மத்தி அமெரிக்காவிலுள்ள பெலிஸ் நாட்டில் கண்டறியப்பட்டது. ஆனால் இவற்றின் தீவிர தாக்குதலானது புளோரிடா மாகாணத்தில் 2009 ம் ஆண்டு தென்னையில் கண்டறியப்பட்டது தமிழகத்தில் முதல் முறையாக பொள்ளாச்சி பகுதிகளில் கடந்த 2016 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. வாழ்க்கை சுழற்சி : இந்த வௌ்ளை ஈக்கள் வட்ட அல்லது சுருள் வடிவிலான 0.3 மி.மீ அளவுள்ள மஞ்சள் நிற முட்டைகளை இலைகளின் அடிப்பரப்பில் தனித்தனியாக இடுகின்றன. இவை மெழுகுப் பொருளால் ஒன்றிணைக்கப்பட்டு அரை வட்டமாகக் காட்சியளிக்கும். முட்டையிலிருந்து வெளிவரும் முதல்நிலைக் குஞ்சுகள் கால்களுடன் நகரும் தன்மை கொண்டவை மற்ற நிலை குஞ்சுகள் நகரும் தன்மை அற்றவை. முதிர்ந்த பருவத்தில் இறக்கைகளுடன் காணப்படும் 25 மி.மீ, நீளமுள்ள இவை மற்ற வௌ்ளை ஈக்களைக் காட்டிலும் அளவில் சற்று பொியவை மேலும் ஒழுங்கற்ற இளம்பழுப்பு நிற பட்டையானது இதன் இறக்கைகளில் காணப்படுவது இவற்றைக் கண்டறிவதற்கு முக்கிய அடையாளமாகும். சேத அறிகுறி : குஞ்சுகளானது இலைகளின் சாற்றை உறிஞ்சி வளா;கின்றன இவை 30 நாட்களில் முழு வளா்ச்சியடைந்த ஈக்களாக மாறி காற்றின் திசையில் பரவி அடுத்தடுத்த தோட்டங்களில் உள்ள தென்னை மரங்களில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்த ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் கூட்டம் கூட்டமாக தென்னை ஒலைகளின் அடிப்பகுதியில் காணப்படும் இந்த ஈக்களிலிருந்து வெளியேறும் பசை போன்ற கழிவு இலைகளின் மேல் படர்ந்து கேப்னோடியம் எனப்படும் கரும்பூசணம் ஏற்பட ஏதுவாகின்றது.

இவ்வாறு மேற்புறம் கருப்பாக மாறிய ஒலையில் பச்சையம் செயலிழந்து மகசூல் குறையவும் வாய்ப்புள்ளது. ரூகோஸ் சுருள் வௌ்ளை ஈயானது, 200க்கும் மேற்பட்ட பயிர்களைத் தாக்குவதாகக் கண்டறியப்பட்டுள்ளது அவற்றுள் மிக முக்கியமானவை மா, பலா, வாழை, கொய்யா, சீதாப்பழம் உள்ளிட்டவையாகும். ஆனால் குட்டை ரக தென்னை மரங்களையே இவை அதிக அளவில் தாக்கும் தன்மை வாய்ந்தவை. தடுப்பு முறைகள் : ஏக்கருக்கு ஒன்று என்ற அளவில் விளக்கு பொறிகளைப் பயன்படுத்தி பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் .மஞ்சள் நிற ஒட்டும் பொறிகள் வளா்ச்சியடைந்த வௌ;ளை ஈக்களை கவரும் தன்மையுடையவை. எனவே 3 அடி நீளம் மற்றும் 1 அடி அகலமுடைய பாலீத்தீன் தாள்களால் ஆன ஒட்டும் பொறிகளை ஏக்கருக்கு 20 எண்ணிக்கையில் தென்னைத் தோட்டங்களில் 5 முதல் 6 அடி உயரத்தில் வைத்து பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் .பூச்சிகளின் வளா்ச்சியைத் தடுக்க தென்னை ஒலையின் அடிப்புறம் தண்ணீரை நன்கு பீய்ச்சியடிக்க வேண்டும் .கிரைசோபாலா இரை விழுங்கிகள் இந்த பூச்சிகளின் வளா்ச்சி நிலைகளை நன்றாக உள்கொள்வதால் ஒவ்வொரு தென்னந்தோப்புகளிலும் இதை ஹெக்டேருக்கு 1 என்ற எண்ணிக்கையில் இட வேண்டும். ஒரு லிட்டர் நீருக்கு வேப்பெண்ணெய் 30 மில்லி அல்லது அசாடிராக்டின் ஒரு சதவீத மருந்தை ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி என்ற அளவில் தேவையான அளவு ஒட்டும் திரவத்துடன் கலந்து தென்னை ஒலையின் அடிப்புறம் நன்கு படும்படி 15 நாட்கள் இடைவெளியில் 2 முறை தெளித்து தாக்குதலைக் குறைக்க வேண்டும்.

இலைகளின் மேல் படரும் கரும்பூசணத்தை நிவா்த்தி செய்ய ஒரு லிட்டா் நீருக்கு 25 கிராம் என்ற அளவில் மைதா மாவுக் கரைசலை தென்னை ஒலைகளின் மேல் நன்கு படுமாறு தெளிக்க வேண்டும். இவ்வகை வௌ்ளை ஈக்கள் அதிகளவு பரவும்போது கிரைசோபாலா இரைவிழுங்கிகள் காக்சினெல்லிட் பொறி வண்டுகள் மற்றும் என்காரிஸியா ஒட்டுண்ணிகள் ஆகிய இயற்கை எதிரிகள் தோப்புகளிலியே உருவாக ஆரம்பிக்கும். அதிகஅளவு பூச்சிக்கொல்லிகளை உபயோகிக்கும்போது இயற்கை எதிரிகள் அழிந்துவிடும் .எனவே பூச்சிக்கொல்லிகளைத் தவித்து இயற்கை எதிரிகள் வளர்வதற்குரிய சூழலை மேம்படுத்துவது முக்கியமாகும்.இந்நிலையில் திருச்சி மத்திய ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மையம் வௌ;ளை ஈக்களுக்கு தீர்வாக உயிரியல் முறையில் கட்டுப்படுத்த ஐசோரியா பூமேஸாரோசே எனும் பூஞ்சாண வகையை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. ஆகையால் தென்னை விவசாயிகள் அனைவரும் புதிய வகையான ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ பூச்சியின் நடமாட்டத்தை கண்காணித்து அவசரகால தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார். மேலும் பட்டுக்கோட்டை வட்டாரத்தில் உள்ள தனியார்உரக்கடை உரிமையாளாகள் இப்பூச்சி தாக்குதலுக்கு ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளைக் விவசாயிகளுக்கு விற்பனை செய்ய கூடாது என கேட்டுக்கொண்டார்.

Tags : Agriculture officer consultation ,South , Coconut, White Egg, Controlling Methods, Advice
× RELATED சோதனைகளும் சாதனைக்கே!