சென்னை: போலீஸ் பாதுகாப்பு கோரி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தொடர்ந்த வழக்கில் பிப்.10-க்குள் விளக்கமளிக்க காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரஜினி நடித்த தர்பார் திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருந்தார். தர்பார் பட நஷ்ட விவகாரம் தொடர்பாக மிரட்டல் வருவதால், பாதுகாப்பு கோரி இயக்குநர் முருகதாஸ் வழக்கு தொடர்ந்தார். முருகதாஸ் கோரிக்கை மனு மீது எடுத்த நடவடிக்கை என்ன? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.