டெல்லி: சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பை எதிர்த்த மறுஆய்வு மனுவை 9 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கலாம் என அரசு தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா தெரிவித்துள்ளார். மறுஆய்வு மட்டுமல்லாமல் மறு சீராய்வு மனுவையும் விரிவான அமர்வு விசாரணைக்கு பரிந்துரைக்கலாம். அரசியல் சாசனம், அடிப்படை உரிமைகள் தொடர்பான வழக்குகளை விரிவான அமர்வுக்கு பரிந்துரைக்கலாம் எனவும் கூறியுள்ளார்.