×

காஞ்சிபுரம் பரந்தூரில் சென்னையின் 2-வது விமான நிலையம்?; நிலங்களை அளிக்க முடியாது என விவசாயிகள் திட்டவட்டம்

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னையின் 2-வது விமான நிலையம் அமைப்பதற்கான அதிகார்ப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுமார் 4,500 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள இந்த விமான நிலையத்திற்காக கண்சல்டட் எனப்படும் ஆலோசகர் நிறுவனத்திற்கான சர்வதேச ஏலம் விரைவில் விடப்பட உள்ளது. தேர்வு செய்யப்பட உள்ள நிறுவனர் நிதி மாதிரி மற்றும் வளர்ச்சி மாதிரி தொடர்பான திட்ட அறிக்கையை தயார் செய்து அரசுக்கு அளிக்க உள்ளது.

ஆனால் விமான நிலையம் அமைக்க தங்களது விவசாய நிலங்களை அளிக்க முடியாது என்று பரந்தூர் விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். விமான நிலையம் அமையும் இடம், பரந்தூரா அல்லது மாமண்டூரா மார்ச், ஏப்ரலில் இறுதி செய்யப்படும். அதன்பின்னர் நிலம் கையகப்படுத்தும் பணியை தமிழ்நாடு தொழில்வளர்ச்சி கழகம் தொடங்க உள்ளது. இந்த விமான நிலையம் சர்வதேச விமானங்கள் வந்து செல்லும் இடமாகவும், சரக்குகளை கையாளும் இடமாகவும் இருக்கும். பசுமைவெளி விமான நிலையமாக அமைய உள்ள இங்கு நட்சத்திர விடுதிகளும் அமைய உள்ளன.


Tags : Chennai ,2nd Airport ,Kanchipuram Farmers ,lands ,Paradur Airport ,Kanchipuram ,Airport , Chennai, Airport, Paradur Airport, Kanchipuram, Farmers
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...