×

துருக்கியில் விமானம் தரைஇறங்கியபோது 3 துண்டாக உடைந்து விபத்து: 3 பேர் பலி, 179 பேர் படுகாயம்

அங்காரா:  துருக்கி நாட்டில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கிய போது திடீரென விபத்து ஏற்பட்டு அந்த விமானம் 3 துண்டுகளாக உடைந்து நொறுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 179 பேர் படுகாயமடைந்ததாகவும் 3 பேர் உயிரிழந்ததாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. துருக்கி நாட்டில் இஸ்தான்புல் நகரில் உள்ள விமான நிலையத்திற்கு பயணிகள் விமானம் ஒன்று, நேற்று தரை இறங்கியது. அந்த விமானத்தில், மொத்தம் 177 பயணிகளும் 6 விமான நிலைய ஊழியர்களும் இருந்தனர். விமானம் தரையிறங்கியபோது,  விமான நிலையத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து கொண்டிருந்ததால், ஓடுபாதை ஈரப்பதத்துடன் காணப்பட்டது. அப்போது, தரையிறங்கிய விமானம் திடீரென வழுக்கிக்கொண்டு விபத்தில் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதில் விமானத்தின் உள்பாகங்கள் சேதம் அடைந்ததாகவும், மேலும் விமானத்தினுள்ளே தீ பற்றி கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து, விபத்தில் விமானம் 3 துண்டுகளாக உடைந்து நொறுங்கியதாக கூறப்படுகிறது. இதனால், தகவல் அறிந்ததும், தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் விமானத்தில் இருந்த பயணிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.  இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக, அதிகாரபூர்வ அறிவிப்பை இஸ்தான்புல் விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் காயமடைந்த 179 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாகவும் துருக்கி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Tags : plane crashes ,Turkey , Turkey, Airplane, Accident, Kill, Injury
× RELATED காசா மீது இஸ்ரேல் படைகள் தீவிர...