×

மகளுக்கு தொல்லை தந்த தந்தை போக்சோவில் கைது

கீழ்ப்பாக்கம்: சென்னை டி.பி.சத்திரம், குச்சி நாயகன் தெருவை சேர்ந்தவர் பழனி (45). கூலித்தொழிலாளி. இவரது மனைவி மாலதி. தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். மகள்கள் இருவரும் தாயுடன் வசிக்கின்றனர். இந்நிலையில் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு பழனி வீட்டுக்கு வந்தார். அப்போது இளைய மகள் மட்டும் தனியாக இருந்தார். அப்போது பழனி அந்த சிறுமியிடம் மகள் என்று கூட பார்க்காமல் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. தாய் வீட்டுக்கு வந்ததும் மகள் அழுதபடி கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாலதி கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பழனியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Tags : molesting father , The troublesome daughter, father, arrested in pokco
× RELATED மது பாட்டில்களை மொத்த விற்பனை...