×

நித்தியானந்தாவின் ஜாமீனை ரத்து செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பெங்களூரு: நித்தியானந்தாவின் ஜாமீனை ரத்து செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீட ஆசிரமம் அமைந்துள்ளது. அவருக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செக்ஸ் புகாரில் நித்யானந்தா கைது செய்யப்பட்டார். அவருக்கு கர்நாடக ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அந்த ஜாமீனை ரத்து செய்வதாக கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நித்யானந்தா தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளார். அவரை கைது செய்து அழைத்து வர ‘புளு’ கார்னர் நோட்டீசு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Karnataka High Court ,Nithyananda , Nithyananda, Bail, Karnataka High Court
× RELATED பெங்களூருவில் உள்ள ஜெயலலிதா நகைகளை...