×

செம்மலர் நகர் பகுதியில் தார்சாலை அமைக்க கோரிக்கை

கரூர்: கரூர் காதப்பாறை பஞ்சாயத்துக்குட்பட்ட செம்மலர் நகர்ப்பகுதியில் மண்சாலையை தார்ச்சாலையாக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் காதப்பாறை பஞ்சாயத்துக்குட்பட்ட அருகம்பாளையம் பகுதியில் செம்மலர் நகர் உள்ளது. இந்த நகரைச் சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இதில், ஒரு குடியிருப்புக்கு செல்லும் சாலை கடந்த பல ஆண்டுகளாகவே மண்சாலையாகவும், மேடும் பள்ளமுமாகவும் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், நடந்து செல்பவர்களும் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே, இந்த பகுதியினர்களின் கோரிக்கைளை ஏற்று இந்த சாலையை தார்ச்சாலையாக்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செம்மலர் நகர்ச் சாலையில் ஒன்றாக உள்ள இந்த சாலையை தரம் உயர்த்த வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.

Tags : area ,Semmler Nagar , Semmler Nagar, Darsalai
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...