கரூர்: போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ஒருமணிநேரம் தலைமையாசிரியர் பொறுப்பு பரிசாக வழங்கப்பட்டது. கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியம் லிங்கத்தூர் துவக்கப் பள்ளியில் வாய்ப்பாட்டு ஒப்புவித்தல்போட்டி நடைபெற்றது. இதில் மூன்று மாணவர்கள் முதலிடம் பிடித்தனர். 2மாணவிகள், ஒரு மாணவன் தலைமையாசிரியர் இருக்கையில் உட்கார வைக்கப்பட்டனர். தலைமையாசிரியர் பொறுப்பை அவர்கள் கவனிப்பது பரிசாக அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியால் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை, உற்சாகம் வளரும், மேலும் பிற மாணவர்களும் நாமும் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில் ஈடுபடுவார்கள். ஒவ்வொரு திங்கள் கிழமையும் இதுபோன்ற கல்விசார் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெறுவோர் தலைமையாசிரியர் இருக்கையில் அமரவைக்கப்பட்டு நிர்வாகம் செய்யும் வாய்ப்பு வழங்கப்படும் என தலைமையாசிரியர் பரணிதரன் தெரிவித்தார்.