×

திருப்பதி அருகே காரில் கடத்திய 30 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்: சென்னை ராணுவவீரர் உட்பட 5 பேர் கைது

திருமலை: திருப்பதி அருகே 2 கார்களில் கடத்திய 30 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.  ஆந்திராவின் தடுக்குப்பேட்டை சோதனைச்சாவடியில் நகரி போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த 2 கார்களை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 14 செம்மரக்கட்டைகள், 3 கத்திகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்த 5 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள், சென்னையை சேர்ந்த ராணுவ வீரர் சுரேஷ்,   திருவண்ணாமலை மாவட்டம், போளூரை சேர்ந்த டிரைவர் மைக்கேல், தங்கராஜ், குப்புசாமி, முருகன் என தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 2 கார்கள், 30 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள், கத்திகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தலில் ஈடுபட்ட சுரேஷ், காஷ்மீரில் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். விடுமுறையில் வந்த அவர் செம்மரக்கடத்தலில்  ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : soldiers ,Chennai ,soldier ,car raid ,Tirupati , Tirupati, sheep, Chennai army soldier, arrested
× RELATED தேர்தல் பணிக்கு வந்த துணை ராணுவ படையினருக்கு திருத்தணி போலீசார் விருந்து