×

அசாமில் பஸ் கவிழ்ந்து 6 பேர் பலி

கோல்பாரா: அசாம் மாநிலம், தூப்ரியில் இருந்து கவுகாத்தி நோக்கி பஸ்  ஒன்று சென்று கொண்டிருந்தது. இது, கோல்பாரா மாவட்டத்தை கடந்தபோது, எதிர்பாராத விதமாக மின் கம்பத்தின் மீது மோதியதில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். 30 பேர் காயமடைந்தனர். அந்த வழியாக வேனில் சென்று கொண்டிருந்த காவலர்கள், ராணுவத்தினர் உடனடியாக பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags : bus crash ,Assam ,Assam The Bus , 6 killed in bus accident in Assam
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...