×

விமானத்தில் கடத்தி வந்த 50 லட்சம் மதிப்பு நகைகள் பறிமுதல்

சென்னை : விமானம் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. துபாய், மலேசியா, இலங்கை நாடுகளிலிருந்து சென்னைக்கு விமானங்களில் கடத்தி கொண்டுவரப்பட்ட ரூ.50.7 லட்சம் மதிப்புடைய 1.2 கிலோ தங்கம், 25 பழைய லேப்டாப்களை சென்னை விமான நிலை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஆடைகளுக்குள்ளும், லேப்டாப்களுக்குள்ளும் மறைத்து வைத்து எடுத்துவந்த ராமநாதபுரத்தை சேர்ந்த அஞ்சலி தேவி (36), விஜயா (57), சென்னையை சேர்ந்த உசேன் (37), ஜீனத்கான் (44) ஆகிய 4 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.


Tags : jewelery , Aircraft, smuggling, jewelery
× RELATED 3 நகை பட்டறைகளில் வருமானவரி சோதனை