×

சென்னை சென்ட்ரல் அருகே மாணவர்கள் கடும் மோதல்: மாநகர பஸ் கண்ணாடி உடைப்பு

தண்டையார்பேட்டை: மந்தவெளியில் இருந்து மாநகர பேருந்து (தடம் எண்.21) ேநற்று பிராட்வே நோக்கி சென்று கொண்டிருந்தது. ஓட்டுனர் கீர்த்திவாசன் (40) என்பவர் பேருந்தை ஓட்டினார். சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பேருந்து சென்றபோது, அங்கிருந்த கல்லூரி மாணவர்களுக்குள் திடீரென மோதல் ஏற்பட்டது. சரமாரியாக மோதிக்கொண்ட அவர்கள், திடீரென அவ்வழியே வந்து இந்த மாநகர பேருந்து கண்ணாடியை அடித்து உடைத்தனர். இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர். இதையடுத்து, மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து பேருந்து நடத்துனர் பாலாஜி (36) கொடுத்த புகாரின் பேரில் பூக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.  அதில், புதுக்கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் மாநகர பேருந்தின் கண்ணாடியை உடைத்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கல்லூரி மாணவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags : Chennai Central , Chennai Central, Students, Municipal Bus Glass
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!