போட்செஃப்ஸ்ட்ரூம்: 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரைஇறுதியில் இந்திய அணிக்கு 173 ரன் இலக்காக பாகிஸ்தான் அணி நிர்ணயித்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ரொஹைல் நசீர் 62, ஹைதர் அலி 56 ரன்களும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் சுஷாந்த் மிஸ்ரா 3, கார்த்திக் தியாகி 2, ரவி பிஷ்னோவ் 2 விக்கெட்டை எடுத்தனர்.