×

விழுப்புரத்தில் பட்டப்பகலில் நாட்டு வெடிகுண்டை வீசி பெட்ரோல் பங்க் மேலாளர் கொலை

விழுப்புரம் : விழுப்புரத்தில் பட்டப்பகலில் நாட்டு வெடிகுண்டை வீசி பெட்ரோல் பங்க் மேலாளர் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கம்மர் நகரைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவர் கொலை செய்யப்பட்டவர் ஆவார். இவர் அதே பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் காரில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பலைச் சேர்ந்த ஒருவர் ஸ்ரீனிவாசனின் அறைக்கு சென்று அவர் மீது வெடிகுண்டு வீசி உள்ளார். அப்போது மயங்கி விழுந்த அவரை மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு, கூட்டாளிகளுடன் தப்பி விட்டனர். இதனால் சம்பவ இடத்திலேயே ஸ்ரீனிவாசன் உயிரிழந்தார்.

இதனிடையே சத்தம் கேட்டு அங்கு வந்த பங்க் ஊழியர்கள், கொலையாளியை பிடிக்க முயன்றனர். அவர்களை கத்தியை காட்டி மிரட்டி விட்டு காரில் ஏறி தப்பிச் சென்று விட்டார். இந்த கொலை சம்பவம்
தகவல் அறிந்ததும் விழுப்புரம் எஸ்பி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சீனிவாசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகளின்  கார் புதுவை மார்க்கமாக சென்றது தெரியவந்தது. எனவே அவர்கள் புதுவை மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என தெரிகிறது. அவர்களை பிடிக்க சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பட்டப்பகலில் பெட்ரோல் பங்கில் வெடிகுண்டு வீசி, மேலாளர் கொல்லப்பட்டது பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Petrol punk manager ,countryman ,punk manager ,Villupuram , Villupuram, Graduation Day, Country Bomb, Petrol Punk, Murder, Manager
× RELATED தொடர்ந்து 8 மணி நேரம் டப்பிங் பேசினார் கவுண்டமணி