×

வாலிபர் கொலை வழக்கில் 3 பேரிடம் விசாரணை

ஆவடி: திருநின்றவூர் வச்சலாபுரம், 3வது தெருவில் உள்ள பாழடைந்த வீட்டில் நேற்று முன்தினம் ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவலறிந்த திருநின்றவூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி, கொலை செய்யப்பட்டவர் யார், எந்த ஊர் என விசாரணை நடத்தினர். அதில், கொலை செய்யப்பட்ட வாலிபர் ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த சதீஷ் (19) என்பதும், இவர் வேலை ஏதுவும் செய்யாமல் நண்பர்களுடன் ஊர்சுற்றி வந்ததும் தெரியவந்தது. மேலும், இவருக்கும் நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இவரை நண்பர்கள் திருநின்றவூருக்கு அழைத்து சென்று, வெட்டி கொலை செய்துள்ளனர் என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சதீஷின் 3 நண்பர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.



Tags : murder ,Prosecutors ,plaintiff , plaintiff, murder, Investigating, 3 people
× RELATED மூத்த நடிகர் ஜனகராஜ் நடிப்பில் ‘தாத்தா‘ குறும்படம் !