×

செல்போன் பறித்த சிறுவர்கள் உட்பட மூன்று பேர் கைது

துரைப்பாக்கம்: திருவான்மியூர் தெற்கு அவென்யூவை சேர்ந்தவர் தர் (50). தனியார் கம்பெனி ஊழியர். இவர் கடந்த 27ம் தேதி வேலைக்கு சென்று விட்டு இரவு 11 மணியளவில் பஸ்சில் திருவான்மியூருக்கு திரும்பினார். பின்னர், செல்போன் பேசியபடி வீட்டுக்கு நடந்து சென்றார். அந்த நேரத்தில் அவ்வழியாக பைக்கில் வந்த 3 பேர், திடீரென தரின் செல்போனை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பினர்.இதுகுறித்து திருவான்மியூர் போலீசில் தர் புகார் செய்தார். அடையாறு துணை கமிஷனர் பகலவன் உத்தரவின் பேரில், திருவான்மியூர் உதவி கமிஷனர் ரவி, இன்ஸ்பெக்டர் அன்புகரசன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.

அதில் பதிவாகியிருந்த 3 பேரின் முகம் மற்றும் பைக் நம்பரை வைத்து விசாரித்தனர். அப்போது, அவர்கள், பெசன்ட் நகர் ஊரூர் குப்பத்தை சேர்ந்த விஜய் (19) மற்றும் 2 சிறுவர்கள் என தெரிந்தது. தொடர்ந்து 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 13 செல்போன் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். விஜய்யை, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மற்ற 2 சிறுவர்களை, கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

Tags : children ,boys , Cell phone ,snatched,arrested
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...