×

திருச்சுழி அருகே சாலையோரம் அச்சுறுத்தும் குவாரி பள்ளம் வாகன ஓட்டிகள் திக்... திக்... தடுப்புச்சுவர் அமைக்க கோரிக்கை

திருச்சுழி: திருச்சுழி அருகே, ஆலடிப்பட்டி-வேடநத்தம் சாலையில், ஓரமாக இருக்கும் குவாரி பள்ளத்தால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சாலையோரம் தடுப்புச்சுவர் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சுழி அருகே, ஆலடிபட்டியில் இருந்து வேடநத்தம் செல்ல 2 கி.மீ தூரமுள்ள குறுக்குப் பாதை உள்ளது. இப்பாதையை பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். வேடநத்தம், தம்மநாயக்கன்பட்டி கிராம மக்கள் அருப்புக்கோட்டைக்கு ஒத்தக்கடை, முத்துராமலிங்கபுரம் வழியாகச் சென்றால் பயண நேரம் அதிகமாகும். இதனால், ஆலடிபட்டி-வேடநத்தம் குறுக்கு பாதை வழியாக சென்று வருகின்றனர். இதனால், விரைவாக அருப்புக்கோட்டைக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2018ல் பிரதம மந்திரி கிராமப்புற சாலை திட்டத்தின் கீழ், ஆலடிப்பட்டி-வேடநத்தம் குறுக்குப்பாதையில் தார்ச்சாலை அமைக்கப்பட்டது.  

தற்போது பெரும்பாலான கிராம மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே, ஆலடிப்பட்டி-வேடநத்தம் மார்க்கத்தில் சாலையோரம் 100 அடி ஆழமுள்ள குவாரிப் பள்ளம் உள்ளது. இதனால், இரவு நேரத்தில் வரும் வாகன ஓட்டிகள் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, குவாரி அமைந்திருக்கும் பகுதியில் சாலையோரம் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘அருப்புக்கோட்டை செல்ல, இந்த பாதையை குறுக்கு வழியாக பயன்படுத்தி வருகின்றோம். இரவு நேரங்களில் டூவீலர்களில் வரும் நபர்கள், குவாரி பள்ளத்தில் விழும் அபாயம் உள்ளது. மேலும், சாலை வளைவில் பள்ளம் இருப்பதால், வெளியூர்களிலிருந்து வரும் வாகன ஓட்டிகள், தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே, கல்குவாரி பள்ளம் இருக்கும் பகுதியில், சாலையோரம் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Quarry crater motorists ,crater motorists ,Tiruchi Trichy ,Quarry , Tiruchuzhi. Road, quarry groove
× RELATED திருச்சி அருகே திருவெறும்பூர் வங்கி...