டிஸ்பூர் : அசாமில் பூமிக்கடியில் பதிக்கப்பட்ட எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டதால் ஆறு ஒன்று தீப்பிடித்து எரிந்து வருகிறது. திப்ரூகர் மாவட்டத்தில் உள்ள சசோனி கிராமப் பகுதியில் ஓடும் புர்கி டைகிங் (Burhi Dihing) ஆறு கரைப்பகுதியை ஒட்டி கடந்த 3 நாட்களாக எரிந்து வருகிறது.அந்த ஆறு வழியாக செல்லும் ஆயில் இந்தியா லிமிட்டட் நிறுவனத்தின் எண்ணெய்க்குழாயில் கசிவு ஏற்பட்டதாகவும், அதற்கு மர்மநபர்கள் தீவைத்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து அரசு அதிகாரிகளுக்கு தகவலளித்தும், இதுவரை தீயை அணைக்க எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டும் கிராம மக்கள், தொடர்ந்து எரிந்து வரும் தீயால் அச்சமடைந்துள்ளனர். தீயை அணைக்க ஆயில் இந்திய நிறுவனம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொது மக்கள் கூறியுள்ளனர்.