×

தமிழக போலீசாருக்கு ஐ.எஸ்.தீவிரவாதிகள் பகீரங்க மிரட்டல் : துப்பாக்கி, வெடிகுண்டு படத்துடன் மிரட்டல் கடிதம் வெளியீடு

சென்னை : தீவிரவாதிகள் கைது நடவடிக்கைக்கு எதிராக அல் ஹிந்த் பிரிகேட் என்ற தீவிரவாத அமைப்பு பகீரங்க மிரட்டல் விடுத்துள்ளதால் போலீசார் உஷார்ப்படுத்தப்பட்டுள்ளனர். அம்பத்தூர் இந்து முன்னணி நிர்வாகி சுரேஷ் களியக்காவிளை எஸ்ஐ வில்சன் கொலை சம்பவங்களை அடுத்து தமிழகம், டெல்லி, பெங்களூருவில் ஐஸ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். சுரேஷ் கொலையில் தொடர்புடைய காஜா மொய்தீன், அவரது கூட்டாளிகள் என கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

களியக்காவிளை எஸ்ஐ வில்சனை சுட்டுக் கொன்ற கொலையாளிகளும் கைது செய்யப்பட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அல்ஹிந்த் பிரிகேட் என்ற தீவிரவாத அமைப்பு சமூக வலைத்தளத்தில் பகீரங்க மிரட்டல் விடுத்துள்ளது.டெல்லி கியூ பிரிவு போலீசாரை இழிவுப்படுத்தி தமிழில் எழுதிய வாசகம் ஒன்றை டெலிகிராம் என்ற சமூக வலைத்தளத்தில் அந்த அமைப்பு பதிவிட்டது. அந்த பதிவில் துப்பாக்கி வெடிகுண்டுகள் படங்களை இணைத்து மிரட்டல் விடுத்திருந்தன.இது தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளன. சமூக வலைத்தளத்தை இயக்கி வருபவர் யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags : terrorists ,Tamil Nadu ,ISF ,policemen , Al-Hind Brigade, Terrorists, Arrests, Ammunition
× RELATED 133 பேர் பலியான மாஸ்கோ தாக்குதல்...