×

மெட்ரோ ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள 20 ஓவியங்களில் சிறந்தது எது? பயணிகள் தேர்ந்தெடுக்கின்றனர்

சென்னை: சிறந்த கலைஞர் விருது-2020 தேர்ந்தெடுக்க ஒவ்வொரு மெட்ரோ ரயில்நிலையங்களிலும் பயணிகள் வாக்களிக்க 20 ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ளது. சென்னை, மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னை கலைப்பள்ளியுடன் இணைந்து நடத்தும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி நேற்று காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை சென்ட்ரல் மெட்ரோ, எழும்பூர் மெட்ரோ, ஷெனாய் நகர் உள்பட 15 மெட்ரோ ரயில் நிலையங்களில் நடைபெற்றது.
மெட்ரோ ரயில், மெட்ரோ ரயில்நிலையம் அல்லது மெய்நிகர் உண்மை என்கின்ற தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. 15 மெட்ரோ நிலையங்களிலும் பங்கேற்ற மொத்தம் 1100 பங்கேற்பாளர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதில் 1 முதல் 3ம் வகுப்பு, 4 முதல் 6ம் வகுப்பு, 7 முதல் 9ம் வகுப்பு, 10 முதல் 12 வகுப்பு, கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். இதில் தேர்வு செய்யப்பட்ட 20 ஓவியங்கள் 15 மெட்ரோ நிலையங்களில் பொதுமக்களின் வாக்கெடுப்புக்காக வைக்கப்படும். தேர்வாகும் ஓவியருக்கு சிறந்த கலைஞர் விருது-2020 விருது வழங்கப்படும். பிப்ரவரி 9ம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) சென்ட்ரல் மெட்ரோவில் பிற்பகல் நடத்தப்படும் விழாவில் வெற்றியாளர்களுக்கு ரொக்கப்பரிசும், சான்றிதழும் வழங்கப்படும்.

Tags : station ,Travelers ,metro station , Metro train, 20 paintings, what's the best? Travelers, choosing
× RELATED வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில்...