சென்னை: டெல்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில், தமிழக என்சிசி அணி ஒட்டுமொத்தமாக மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இந்திய அரசின் பாதுகாப்புப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: டெல்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் பல்வேறு பதக்கங்களை வென்ற தமிழக என்சிசி அணிக்கு சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக அணி பல்வேறு பிரிவுகளில் கோப்பைகளை வென்றது. இதில் 4 தங்கப்பதக்கம், 1 வெள்ளி பதக்கம், 2 வெண்கல பதக்கம் ஆகியவை அடங்கும். இந்த நிகழ்ச்சியில் 17 மாநிலங்களை சேர்ந்த என்சிசி அணிகள் கலந்து கொண்டன. தமிழ்நாடு என்சிசி அணி ஒட்டுமொத்தமாக மூன்றாவது இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.