×

சிறையில் இருந்து சசிகலா வந்ததும் அதிமுகவில் மாற்றம் ஏற்படும்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவர் கருணாஸ் எம்எல்ஏ அளித்த பேட்டி:
நடிகர் சங்க பிரச்னையில் ஐசரி கணேஷ் எங்கள் மீது விமர்சனம் செய்து வருகிறார். ஆனால் அவருக்குத்தான் நீதிமன்றம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்து உள்ளது. எனினும் எங்களின் சட்ட ரீதியான போராட்டம் தொடரும். தற்போது அறிவிக்கப்பட்ட மத்திய பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்க கூடியதாக உள்ளது. சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்ததும் அ.தி.மு.க.வில் மாற்றம் ஏற்படும் என்பதே மக்களின் மனநிலையாக உள்ளது. நான் எம்.எல்.ஏ ஆவதற்கு காரணமாக இருந்தவர் சசிகலா. அவர் சிறையில் இருந்து வந்து என்னை அழைத்தால் நான் சென்று பார்ப்பேன். இவ்வாறு கருணாஸ் கூறினார்.

Tags : release ,AIADMK ,prison ,Sasikala , Prison, sasikala, amygdha, change
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...