×

குடிபோதையில் தகராறு பூ கட்டும் தொழிலாளியின் கழுத்தை அறுத்தவர் கைது

சென்னை:  வடபழனி முருகன் கோயில் பிளாட்பாரத்தை சேர்ந்தவர் வாசு (40). இவர், பூ கட்டும் வேலை செய்து வருகிறார். வடபழனி பக்தவச்சலம் காலனி, முதல் தெருவை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ஜானகிராமன் (40). இருவரும் தினமும் மது அருந்துவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு இருவரும் மது குடிக்கும்போது திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த ஜானகிராமன்  மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வாசுவின் கழுத்தை அறுத்தார். இதில் வலிதாங்க முடியாமல் வாசு அலறி துடித்தார்.

அப்போது அருகில் இருந்தவர்கள் சத்தம்கேட்டு ஓடிவந்து ஜானகிராமனை பிடித்தனர். பிறகு சம்பவம் குறித்து பொதுமக்கள் வடபழனி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி உதவி ஆய்வாளர் மணி விரைந்து வந்து வாசுவை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவர் மயக்க நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். பின்னர் சம்பவம் குறித்து  போலீசார் வழக்கு பதிவு செய்து கூலித்தொழிலாளி ஜானகிராமனை கைது செய்தனர்.

Tags : drunkard worker ,dispute ,florist , Drunken , Arrested, throat , florist
× RELATED பூக்கடை பகுதியில் அடுக்குமாடி...