×

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 2 பேர் பலி

ரிவியரா பீச்: அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தின் ரிவைரா பீச் பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் நேற்று முன்தினம் இறுதிச்சடங்கு திருப்பலி நடந்தது. இறந்தவரின் உறவினர்களுக்கு இடையே ஏற்கனவே இருந்த குடும்ப தகராறு  காரணமாக, திருப்பலி முடிந்து, வெளியே வந்ததும் சண்டை ஏற்பட்டது. அப்போது, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 15 வயது சிறுவன், 47 வயது ஆண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பெண் ஒருவர் காயமடைந்தார். துப்பாக்கிச்சூட்டை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், ``திருப்பலி முடிந்து காவலர்கள் புறப்பட்டு சென்றதும், ஏற்பட்ட தகராறில் துப்பாகிச்சூடு நடந்தது’’ என்று கூறினார்.

Tags : shootings ,US ,Gun fire 2 , United States, Gun fire, 2 killed
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்