×

முகலாய பூங்கா நாளை மறுநாள் திறப்பு

புதுடெல்லி: உத்யனோசவம் தினத்தையொட்டி டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகலாய பூங்கா நாளை மறுநாள் முதல் மார்ச் 8ம் தேதி வரை பொது மக்கள் பார்வைக்கு திறக்கப்பட உள்ளது. திங்கட்கிழமை தவிர, ஒவ்வொரு  நாளும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள். அப்போது பொதுமக்கள் இங்குள்ள அருங்காட்சியகத்தையும் பார்வையிடலாம். நெதர்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 10 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட துலிப் பூக்கள், 70 வகையான பூச்செடிகள், 138 விதமான ரோஜாக்கள் உள்ளிட்ட 5 ஆயிரம் பருவக்காலத்து பூக்கள் இந்த பூங்காவின் சிறப்பு அம்சமாகும். அதே நேரம், விவசாயிகள், மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்பு, துணை  ராணுவத்தினருக்கு பிரத்யேகமான முறையில் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Mughal Gardens , Mughal Gardens, day after, tomorrow, Opening
× RELATED சமூக நீதி கருத்தரங்கில் இந்தியா...