×

தீவிரவாதிகள் கையெறி குண்டு வீச்சு தாக்குதல்

ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் கைெயறி குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 2 வீரர்கள் காயமடைந்தனர். மேலும் பொதுமக்கள் 7 பேரும் காயமடைந்தனர். ஜம்மு காஷ்மீரில் லால் சவுக் பகுதியில் நேற்று வழக்கம்போல் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்பட்டது. அங்குள்ள பிரதாப் பார்க் பகுதியல் மத்திய ரிசர்வ் படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தீவிரவாதிகள் திடீரென கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினார்கள். அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அங்கு பணியில் இருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த வீரர்கள் மற்றும் பொதுமக்கள் 7 பேர்  காயமடைந்தனர்.


Tags : Terrorists , Terrorists, attack, grenades
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...