×

களியக்காவிளை எஸ்எஸ்ஐ கொலை தீவிரவாதிகளுக்கு பணம் சப்ளை செய்தவர் ராமநாதபுரத்தில் கைது

நாகர்கோவில்:  களியக்காவிளை எஸ்எஸ்ஐ கொலையில் தீவிரவாதிகளுக்கு பணம் சப்ளை செய்ததாக ராமநாதபுரத்தில் ஷேக் தாவுது என்பவரை போலீசார் கைது செய்தனர். குமரி மாவட்டம் களியக்காவிளை போலீஸ் சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வில்சன்(57) என்பவர் கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பாக குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டை சேர்ந்த அப்துல் சமீம், நாகர்கோவில் இளங்கடையை சேர்ந்த தவுபிக் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களை கடந்த 21ம் தேதி முதல் போலீஸ் காவலில் எடுத்து, டி.எஸ்.பி. கணேசன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

10 நாட்கள் போலீஸ் காவல் விசாரணை முடிந்ததை தொடர்ந்து இவர்கள் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வரும் 14ம் தேதி வரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை பகுதியில் உடற்பயிற்சி கூடம் ஒன்றில் இருந்து ஷேக்தாவுது என்பவரை அங்குள்ள தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் எஸ்எஸ்ஐ வில்சன் கொலை வழக்கில் தொடர்புடைய தீவிரவாதிகளுக்கு பணம் சப்ளை செய்தவர் என்பது தெரியவந்துள்ளது..

Tags : Ramanathapuram ,murder ,terrorists ,SSI , Kaliyakavil, SSI murder, extremist, money supply, arrest
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...