×

பிப்.20ம் தேதி முதல் 3வது தனியார் ரயில்: இந்தூர்-வாரணாசி இடையே இயங்கும்

புதுடெல்லி: இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான ஐஆர்சிடிசி எனப்படும் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் சார்பாக டில்லி- உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோ இடையே அதிநவீன வசதிகள் கொண்ட தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இதனைதொடர்ந்,து 2வதாக குஜராத்தின் அகமதாபாத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை இடையே தனியார் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஐஆர்சிடிசி மூலமாக தற்போது மூன்றாவது தனியார் ரயில் இயக்கப்பட உள்ளது. இது தொடர்பாக ரயில்வே வாரிய தலைவர் வினோத் குமார் யாதவ் கூறுகையில், ‘‘மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூர் முதல் உத்தரப்பிரதேசம் வாரணாசி இடையே எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த சேவை வரும் 20ம் தேதி முதல் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது” என்றார்.

Tags : Indore-Varanasi , On February 20, the 3rd, Private train, Indore-Varanasi, will run
× RELATED நாட்டின் ஜனநாயகத்தை காக்க காங்கிரஸ்...