சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:
சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலம், பகுதி-33, வார்டு-149, பிருந்தாவன் நகர் மயானத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், 1ம் தேதி (நேற்று) முதல், வரும் 29ம் தேதி வரை மேற்கண்ட மயானம் இயங்காது. மேலும், பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் அருகிலுள்ள வார்டு-151, போரூர் மின்சார மயானத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.