நாகை: நாகூர் பட்டினச்சேரியை சேர்ந்த மீனவர் வலையில் ஒன்றரை டன் எடை கொண்ட திமிங்கலம் சிக்கியது. நாகூர் பட்டினச்சேரியை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றார். மீன்களை பிடிக்க கடலில் வலையை வீசினார். அப்போது அவரது வலையில் ஒன்றரை டன் எடைகொண்ட திமிங்கலம் சிக்கியது. உடனே அவர் அதை நாகூர் வெட்டாறு கரைக்கு எடுத்து வந்தார்.
உயிருடன் திமிங்கலம் வலையில் சிக்கியதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர். இதற்கு இடையே திருவண்ணாமலையில் இருந்து நாகூர் தர்காவிற்கு சுற்றுலா வந்த மாணவ, மாணவிகள் உயிருடன் திமிங்கலம் கரையில் இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.