டெல்லி: அரசு நிறுவனமான எல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். வங்கித்துறையில் தனியார் முதலீடுகளின் தேவை அதிகமாக உள்ளது. புதிய கடன் பத்திரங்கள் மூலம் மத்திய அரசுக்கு நிதி திரட்டப்படும். எல்.ஐ.சி.யில் அரசு வசம் உள்ள பங்குகள் பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்படும். 15-வது நிதிக்குழு பரிந்துரையின் அடிப்படையில் எல்.ஐ.சியில் மத்திய அரசின் வசம் உள்ள பங்குகள் விற்கப்படும்.