சென்னை: அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் 15 பேர் குற்றவாளி என்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார். ஒருவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 17 பேரை 2018 ஜூலையில் போலீசார் கைது செய்தனர். 2019 ஜனவரி முதல் 11 மாதங்கள் பாலியல் வன்கொடுமை விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.