சென்னை: அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதை அடுத்து நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி ஒரு சிறுமி 17 பேரால் தொடர்ந்து பல முறை, பல நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது. இந்த வழக்கில் சென்னை மாவட்ட சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்பு நீதின்ற நீதிபதி மஞ்சுளா இன்று தீர்ப்பு வழங்குகிறார்.