சென்னை: சிறைத்துறையில் ஊழல் நடைபெறுவதாக சிறைத்துறை டிஐஜி கனகராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெரிய ரவுடிகள், முக்கிய பிரமுகர்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு சிறையில் தேவையான வசதி செய்து கொடுத்துள்ளனர். சிறைவாசிகளை சந்திக்க வரும் உறவினர்களிடம் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தர சொல்வதாக அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.