×

அயனாவரம் சிறுமி பலாத்காரம் 16 பேர் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு

சென்னை: அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், கடந்த 2018 ஜூன் மாதம், 11 வயது சிறுமியை அதே குடியிருப்பில் வேலை செய்து வந்த வாட்டர் மேன், லிப்ட் ஆபரேட்டர், வாட்ச் மேன் உள்ளிட்டேர் பல மாதங்களாக பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, அயனாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, போக்சோ சட்டத்தின் கீழ், 17 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, போலீசார் 17 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டது. அப்போது அனைவரும் தாங்கள் குற்றமற்றவர்கள் என்றும், தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் மறுப்பு தெரிவித்தனர்.

பின்னர் சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தவும் ஒப்புக்கொண்டனர். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடத்த உத்தரவிட்டார். தொடர்ந்து, ஜனவரி மாதம் விசாரணைகள் தொடங்கப்பட்டு, டிசம்பர் மாதம் முடிக்கப்பட்டது. அதில், அரசு தரப்பு சாட்சியாக 36,120 ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டது. அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் போக்சோ நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா இன்று காலை தீர்ப்பு வழங்க உள்ளார். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Ayanavaram , Ayanavaram woman rape case, 16 people convicted today
× RELATED சென்னையின் பல்வேறு பகுதிகளில் பால்...