×

வாலிபரை வெட்டி செல்போன் பறிப்பு

அண்ணாநகர்: பாடி அருகே நடந்து சென்ற வாலிபரை தாக்கி, அவரிடம் இருந்து விலை உயர்ந்த செல்போன் மற்றும் ₹2 ஆயிரத்தை பறித்து சென்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை பாடி, சிவன் கோயில் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (24). இவர் நேற்று அதிகாலை 3 மணியளவில் வேலை முடிந்து, பாடி மேம்பாலத்தின் கீழ்ப்பகுதி வழியாக வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது பைக்கில் முகமூடி அணிந்து வந்த 2 பேர், அவரை வழிமறித்து, கத்தியை காட்டி பணம், செல்போனை பறிக்க முயற்சித்தனர்.

அவர் தர மறுக்கவே, ஆத்திரமடைந்த மர்ம நபர்கள், விக்னேஷ் தலையில் கத்தியால் வெட்டினர். இதனால், அலறியபடி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். அப்போது, அவரது பாக்கெட்டில் இருந்த 15 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் ₹2 ஆயிரத்தை பறித்துக்கொண்டு மர்ம நபர்கள் பைக்கில் தப்பினர்.


Tags : plaintiff , plaintiff , seize the cellphone
× RELATED திருமண தகவல் மையம் மூலம் பெண்களை...